மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து இன்று மாலை பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று தொடக்கம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஏதோவொரு பொருள் மிதப்பது குறித்தான செய்திகள் வெளிவந்தபோதிலும் அது தொடர்பிலான எந்தவித தகவலும் வெளிவராத நிலையில் இன்றைய தினம் சடலம் கல்லடி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த செ.சாரா(22வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.