• Apr 26 2024

மார்பில் குத்தப்பட்ட கத்தியுடன் நடந்து வந்த இளம்பெண்- பரபரப்பு சம்பவம்! samugammedia

Tamil nila / May 31st 2023, 8:09 pm
image

Advertisement

தன் கணவனால் கத்தியால் குத்தப்பட்ட ஒரு இளம்பெண், கையில் குழந்தையுடனும், மார்பில் கத்தியுடனும் நடந்துவந்த சம்பவம் ஒன்று சுவிஸ் மாகாணம் ஒன்றில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்நிலையில், நேற்று, ஜெனீவாவிலுள்ள Petit-Lancy என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, தனது 30 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர், கையில் குழந்தையுடனும், மார்பில் குத்தப்பட்ட கத்தியுடனும் நடந்து வருவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்தக் குழந்தைக்கு காயம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணின் கணவன் குடியிருப்புக்குள் பதுங்கிய நிலையில், இரண்டு மணி நேரம் அவரை அவர் வெளியே வரவில்லை.

மேலும், பொலிஸார் அந்த வீட்டைக் கண்காணிக்க ஸ்னைப்பர்களை ஏற்பாடு செய்ததுடன், மதியம் 1.00 மணியளவில், stun grenades என்னும் கருவிகளுடன் அந்த குடியிருப்புக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் அந்த நபர் வெளியே கொண்டுவரப்பட்டார். ஆம்புலன்ஸ் ஒன்றில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கடும் அதிர்ச்சியை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மார்பில் குத்தப்பட்ட கத்தியுடன் நடந்து வந்த இளம்பெண்- பரபரப்பு சம்பவம் samugammedia தன் கணவனால் கத்தியால் குத்தப்பட்ட ஒரு இளம்பெண், கையில் குழந்தையுடனும், மார்பில் கத்தியுடனும் நடந்துவந்த சம்பவம் ஒன்று சுவிஸ் மாகாணம் ஒன்றில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.இந்நிலையில், நேற்று, ஜெனீவாவிலுள்ள Petit-Lancy என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, தனது 30 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவர், கையில் குழந்தையுடனும், மார்பில் குத்தப்பட்ட கத்தியுடனும் நடந்து வருவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்தக் குழந்தைக்கு காயம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.அந்தப் பெண்ணின் கணவன் குடியிருப்புக்குள் பதுங்கிய நிலையில், இரண்டு மணி நேரம் அவரை அவர் வெளியே வரவில்லை.மேலும், பொலிஸார் அந்த வீட்டைக் கண்காணிக்க ஸ்னைப்பர்களை ஏற்பாடு செய்ததுடன், மதியம் 1.00 மணியளவில், stun grenades என்னும் கருவிகளுடன் அந்த குடியிருப்புக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் அந்த நபர் வெளியே கொண்டுவரப்பட்டார். ஆம்புலன்ஸ் ஒன்றில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.கடும் அதிர்ச்சியை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement