குன்னூரில் இறந்து விட்டதாக கருதி அடக்கம் செய்யப்பட்ட முதியவர் மீண்டும் குடும்பத்தார் முன் வந்து நின்ற சம்பவம் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குன்னுரில் வசித்து வந்தவர் ராஜேந்திரம். இவர் MGR இன் திரைப்பட பாடல்களை படுவதுடன் அனைவருடனும் கலகலப்பாகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் ராஜேந்திரம் காணாமல் போயுள்ளார். அதையடுத்து பொலிசார் ஒரு சடலத்தினை ராஜேந்திரனது உடலென தெரிவித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனால் பதறிய குடும்பத்தினர் ராஜேந்திரத்திற்கு இறுதி கிரிகைகளை செய்து அடக்கம் செய்துள்ளனர்.
இவ்வாறிருக்கையில் சிறிது நாட்களின் பின்னர் இறந்தவராக கருதப்பட்ட ராஜேந்திரன் குடும்பத்தாரின் கண் முன் சென்று நின்றுள்ளார்.
இதனால் குடும்பத்தார் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக அவர்கள் சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றினை பதிவேற்றியுள்ளார்.
அதில் தமது பெரியப்பா திரும்பி வந்து விட்டதாகவும் அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.