வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ. நா வதிவிடப் பிரதிநிதி நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினார்.
விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் 'வடக்கு மாகாண ஆளுநர், நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் பதவியிறக்கம் வகையில் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பில் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?' என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சார்ள்ஸின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனவே, வெகுவிரைவில் வடக்கு மாகாண ஆளுநர் மாற்றப்படுவார் என்பது எனது கருத்து என்றார்