சங்கானை கல்வி கோட்டத்திற்குட்படட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளி மாணவர்களால் இன்று ஞாயிற்றுகிழமை காலை 8 மணியளவில் கலைமகள் முன்பள்ளி முன்றலில் இடம்பெற்றது.
இதன் பொழுது கலைமகள் முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களால் பல்வேறுபட்ட பொருட்கள் விற்பனை செய்யபட்டதோடு சுழிபுரம் பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் குறித்த சிறுவர் சந்தையில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறித்த சிறுவர் சந்தையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .