சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் அங்குள்ள மக்களால் உலக நாடுகளுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள மக்களில் சரிபாதி பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, சீன பயணிகளை கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்திய இத்தாலி, அதில் 50% சீனர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது.
இத்தாலிய மக்களை இன்னொரு சிக்கலில் தள்ள நாடு தயாராக இல்லை எனவும் வெளிநாட்டு பயணிகளை கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்துவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில், சீன பயணிகளில் சரிபாதி பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அச்சம் அதிகரிகரித்துள்ளது.
மேலும், சீனாவில் தற்போது நான்கு வகையான கொரோனா தொற்றுகள் பரவிவருவதாகவும், இதுவரை அதை உறுதி செய்ய முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சீனாவில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஜப்பான், இந்தியா, தைவான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளது.