ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திலுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருசதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில அமைச்சர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சுக்களும் பத்து அல்லது பதினைந்து நிறுவனங்களும் இருந்தாலும், ஓரிரு சிறு நிறுவனங்களைத் தவிர, இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புகள் எவையும் வழங்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அமைச்சுக்களில் பொறுப்புகள் வழங்கப்படாமையால் குறிப்பிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடுகளும் உருவாகியுள்ளதாக அறியமுடிவதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் கருத்து மோதல். - வெளியான தகவல் samugammedia ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திலுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருசதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சில அமைச்சர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சுக்களும் பத்து அல்லது பதினைந்து நிறுவனங்களும் இருந்தாலும், ஓரிரு சிறு நிறுவனங்களைத் தவிர, இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புகள் எவையும் வழங்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக அமைச்சுக்களில் பொறுப்புகள் வழங்கப்படாமையால் குறிப்பிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடுகளும் உருவாகியுள்ளதாக அறியமுடிவதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.