செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று(14) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது
யாழ் பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய பல்கலை மாணவர்கள், செஞ்சோலையில் உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக செஞ்சோலை படுகொலையின் நினைவுரை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டர் ஜெல்சினால் முன்னெடுக்கப்பட்டது.