முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்றையதினம் தமிழர் தாயக பகுதிகளில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் இரண்டாம் நாளான இன்று யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் இன்று மதியம் முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக A9 வீதி சந்தியில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இன்று மதியம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.