கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட கோர சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தலே இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்றையதினம் 36வது நினைவு தினம் நல்லூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவுகளால் நினைவு கூறப்பட்டது.
இதன்போது வீதியோரமாக அமைந்துள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை சமூக செயற்பாட்டாளர் மு.தமிழ்மணியால் கொக்குவில் படுகொலை தொடர்பான நினைவு உரையும் ஆற்றப்பட்டது.