மின்சாரம் தாக்கி உயிரிழந்த சாமிமலை கவரவிலை தோட்டத்தைச் சேர்ந்த நல்லையா சிவகுமார் என்ற 33 வயது இளைஞரின் மரணத்துக்கு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக ஹொரண பிளாண்டேசன் நிர்வாகத்தின் ஊடாக 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான காசோலைகள் வைப்பிலிடப்பட்டு குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இறந்தவரின் மனைவிக்கு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வேலை வழங்க பட்டுள்ளது என ஜி. நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கவரவிலை தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சிவகுமார் 2022 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி தோட்டத் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக கிளங்கன் நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் நேரடியாக கவரவிலை தோட்டத்துக்கு நேரடியாக விஜயம் செய்து அஞ்சலி செலுத்திய பின்னர், கவரவிலை தோட்ட முகாமையாளர் கமில்ச, ஹொரண பிளாண்டேசன் இயக்குனர் வசந்த குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதற்கமைய இறந்தவருக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கவும், அதில் அவரது மூன்று பிள்ளைகளான மகன் மார்கள் கிஷோர், மிதுன் ஜனார்த்தன், மகள் சக்தி ஆகியோருக்கு தலா 10 இலட்சம் வீதமும் 30 இலட்ச ரூபா, அவரது மனைவி சுஜீவாவுக்கு 20 இலட்ச ரூபாவுடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வேலையும், வீடு அமைக்க காணியும் வழங்க இணக்கம் காணப்பட்டிருந்தது.
அதன்படி அவர்களின் பிறப்புச் சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் முதலான ஆவணங்கள் தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதன் படி நேற்று 12.01.2023 அன்று காசோலைகளை வைப்பிலிட்டு வங்கிப் புத்தகங்களை தோட்ட முகாமையாளர் கமில்ச குடும்பத்தாரிடம் கையளித்துள்ளார்.
இது சம்பந்தமாக நேற்று வியாழக்கிழமை தோட்டத்தில் முகாமையாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஜீ.நகுலேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.