• Jul 27 2024

மொட்டு கட்சிக்குள் குழப்பம்: வெளியேறுகிறாரா மகிந்த..! வெளியான தகவல் samugammedia

Chithra / Oct 9th 2023, 7:28 am
image

Advertisement

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இளைஞர் தலைமைத்துவத்தை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

அத்தோடு, கட்சிக்கு சிரேஷ்ட தலைமைத்துவம் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் இருப்பதாகவும், மகிந்த ராஜபக்ச அந்த பதவிகளை வகிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கட்சியில் தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர்கள் பலர் இருப்பதாகவும், அதனால் யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மகிந்த சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டு கட்சிக்குள் குழப்பம்: வெளியேறுகிறாரா மகிந்த. வெளியான தகவல் samugammedia  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இளைஞர் தலைமைத்துவத்தை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.அத்தோடு, கட்சிக்கு சிரேஷ்ட தலைமைத்துவம் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எவ்வாறாயினும், கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் இருப்பதாகவும், மகிந்த ராஜபக்ச அந்த பதவிகளை வகிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.கட்சியில் தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர்கள் பலர் இருப்பதாகவும், அதனால் யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மகிந்த சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement