கனமழை காரணமாக சென்னையில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தொடர் கனமழையால் ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலில் இன்று பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும் சிலசில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நேற்று முன்தினம் மாலைமுதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடையிடையே கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில் மயிலாப்பூர், மந்தைவெளி,பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர்,அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம், தேனாம்பேட்டை , அண்ணா நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
அதேவேளை சென்னையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணிவரை 4.6 சென்ரி மீற்றர் மழை பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 7.29 சென்ரி மீற்றர்மழை பதிவாகி உள்ளது.
இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் கனமழை. பாடசாலைகளுக்கு விடுமுறை. வெளியான அறிவிப்பு.samugammedia கனமழை காரணமாக சென்னையில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, தொடர் கனமழையால் ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலில் இன்று பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இன்றும் சிலசில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி, நேற்று முன்தினம் மாலைமுதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடையிடையே கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மயிலாப்பூர், மந்தைவெளி,பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர்,அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம், தேனாம்பேட்டை , அண்ணா நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.அதேவேளை சென்னையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணிவரை 4.6 சென்ரி மீற்றர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 7.29 சென்ரி மீற்றர்மழை பதிவாகி உள்ளது.இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.