• May 11 2024

மன்னாரில் போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia

Chithra / Oct 20th 2023, 8:44 am
image

Advertisement

மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை (18) மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து பொலிஸாரால் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மன்னார் வைத்தியசாலை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சாரதியை வியாழக்கிழமை (19) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சாரதியை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மன்னாரில் போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை (18) மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து பொலிஸாரால் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மன்னார் வைத்தியசாலை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் குறித்த சாரதி குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சாரதியை வியாழக்கிழமை (19) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சாரதியை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement