வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் அகற்றப்பட்டு பற்றைககளுக்குள் வீசப்பட்டதுடன் ஆலய வளாகங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதி சிவன் மற்றும் ஆலய விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் ஆலய
நிர்வாகத்தினரால் இன்று(27) நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது
ஆலய விக்கிரகங்கள் அகற்றப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக ஆலய நிர்வாகத்தினர் ஆலய வளாகத்திற்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.