• May 21 2024

கோப் குழுவின் தலைவரால் விசாரணைகளுக்கு இடையூறு - சபையில் கடும் சர்ச்சை samugammedia

Chithra / Nov 15th 2023, 12:15 pm
image

Advertisement


கோப் குழுவில் நேற்று இடம்பெற்ற விசாரணை குறித்து பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கோப் குழு முன் ஆஜரான இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுத்து கொண்டிருந்த போது,

கோப் குழுவின் தலைவரால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கையால் சைகை காட்டபட்டதாக சுட்டிகாட்டி, இன்று பாராளுமன்றத்தில் எதிர் மற்றும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது விளையாட்டு விடயங்களில் அரசியல் தலையீட்டை முற்றாக எதிர்பதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்முதல் திட்டத்திற்கு உட்பட்டே இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா கோப் குழுவில் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடர்பாக அவர்களிடம் பிரதானமாக கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தத் தொடரின்போது செலவிடப்பட்ட நிதி குறித்து கணக்காய்வாளர் நாயகம் கேள்வி எழுப்பியிருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் இன்றி குறித்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா? எனவும் கோப் குழுவின் அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அத்தோடு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை ஈட்டிய இலாபத்தில் வீரர்களுக்கு செலுத்தப்பட்ட தொகை உள்ளிட்ட விபரங்கள் தொடர்பாகவும் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேஸ்லி டி சில்வா, குறித்த நிதியின் 25 வீதம் தேசிய கிரிக்கெட் அணிக்காக செலவிடப்படுவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கருத்துரைத்த இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, அரசாங்கத்திடம் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் சகல நிதியும் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இருந்தே கிடைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்படி, தனியார் நிறுவனம் ஒன்றை போன்றே ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் செலவீனங்கள் இடம்பெறுவதாகவும் ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கோப் குழுவின் தலைவரால் விசாரணைகளுக்கு இடையூறு - சபையில் கடும் சர்ச்சை samugammedia கோப் குழுவில் நேற்று இடம்பெற்ற விசாரணை குறித்து பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதையடுத்து கோப் குழு முன் ஆஜரான இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுத்து கொண்டிருந்த போது,கோப் குழுவின் தலைவரால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கையால் சைகை காட்டபட்டதாக சுட்டிகாட்டி, இன்று பாராளுமன்றத்தில் எதிர் மற்றும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன்போது விளையாட்டு விடயங்களில் அரசியல் தலையீட்டை முற்றாக எதிர்பதாகவும் தெரிவித்தனர்.இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்முதல் திட்டத்திற்கு உட்பட்டே இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா கோப் குழுவில் தெரிவித்துள்ளார்.இதன்போது, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடர்பாக அவர்களிடம் பிரதானமாக கேள்வி எழுப்பப்பட்டது.இந்தத் தொடரின்போது செலவிடப்பட்ட நிதி குறித்து கணக்காய்வாளர் நாயகம் கேள்வி எழுப்பியிருந்தார்.விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் இன்றி குறித்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் கோப் குழுவின் அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.அத்தோடு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை ஈட்டிய இலாபத்தில் வீரர்களுக்கு செலுத்தப்பட்ட தொகை உள்ளிட்ட விபரங்கள் தொடர்பாகவும் வினவப்பட்டது.இதற்கு பதிலளித்த கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேஸ்லி டி சில்வா, குறித்த நிதியின் 25 வீதம் தேசிய கிரிக்கெட் அணிக்காக செலவிடப்படுவதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து கருத்துரைத்த இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, அரசாங்கத்திடம் இருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் சகல நிதியும் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இருந்தே கிடைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இதன்படி, தனியார் நிறுவனம் ஒன்றை போன்றே ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் செலவீனங்கள் இடம்பெறுவதாகவும் ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement