தம்பலகமம் அகில இலங்கை வாலிபர் பேரவையின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று (14) நடைபெற்றது.
அகில இலங்கை வாலிபர் பேரவையினால் இலங்கையில் நாடுபூராகவும் முன்னெடுத்து வரும் தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் விசேட செயற்திட்டத்தின் கீழ் இன்று YMMA தம்பலகமம் அமைப்பின் ஏற்பாட்டில் தம்பலகமம் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று YMMA தம்பலகமம் அமைப்பின் தலைவர் ஏ.எச்.எம்.சித்தீக் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக அகில இலங்கை YMMA பேரவையின் தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக YMMA திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் எம்.எம். முக்தார் , City Garden அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அலிஹாஜி சித்திக் அவர்களும் தம்பலகமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப் ,தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார, தம்பலகமம் YMMA அமைப்பின் செயலாளர் எம்.பீ.பைஸர் அவர்களும் தம்பலகமம் YMMA பேரவையின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பயனாளர்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.
அகில இலங்கை வாலிபர் பேரவையின் ஏற்பாட்டில் தென்னங்கன்றுகள் விநியோகம் தம்பலகமம் அகில இலங்கை வாலிபர் பேரவையின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று (14) நடைபெற்றது. அகில இலங்கை வாலிபர் பேரவையினால் இலங்கையில் நாடுபூராகவும் முன்னெடுத்து வரும் தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் விசேட செயற்திட்டத்தின் கீழ் இன்று YMMA தம்பலகமம் அமைப்பின் ஏற்பாட்டில் தம்பலகமம் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்று YMMA தம்பலகமம் அமைப்பின் தலைவர் ஏ.எச்.எம்.சித்தீக் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக அகில இலங்கை YMMA பேரவையின் தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீட் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ விருந்தினர்களாக YMMA திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் எம்.எம். முக்தார் , City Garden அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அலிஹாஜி சித்திக் அவர்களும் தம்பலகமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப் ,தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார, தம்பலகமம் YMMA அமைப்பின் செயலாளர் எம்.பீ.பைஸர் அவர்களும் தம்பலகமம் YMMA பேரவையின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பயனாளர்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.