• May 02 2024

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியலை திணிக்காதீர்கள்...! ராமேஸ்வரன் எம்.பி வேண்டுகோள்...!

Sharmi / Apr 19th 2024, 4:33 pm
image

Advertisement

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  மருதபாண்டி ராமேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையடுத்து, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை உள்ளிட்ட பகுதிகளிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. சம்பள நிர்ணயசபை மற்றும் தொழில் அமைச்சு ஊடாக கம்பனிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை கூடவுள்ளது. இதன்போது சாதகமான முடிவு கிட்டும் என நம்புகின்றோம். இதற்கிடையில் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டங்களையும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும். தொழிலாளர்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அரசியல் நோக்கில் விதண்டாவாத விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தமது இயலாமையை மூடிமறைத்துக்கொள்வதற்காக காங்கிரஸ்மீது வசைபாடி வருகின்றனர். தொழிலாளர்களின் நலன்கருதியே காங்கிரஸ் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு தொழிற்சங்க சமரை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றது. 

எனவே, உதவி வழங்காவிட்டாலும்,காலை வாராமல் இருக்கும் வகையில் செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில் அரசியல் செய்யலாம். 

சம்பள விடயத்தில் அரசியலை திணிக்க வேண்டாம் எனவும்  அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசியலை திணிக்காதீர்கள். ராமேஸ்வரன் எம்.பி வேண்டுகோள். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  மருதபாண்டி ராமேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையடுத்து, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை உள்ளிட்ட பகுதிகளிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. சம்பள நிர்ணயசபை மற்றும் தொழில் அமைச்சு ஊடாக கம்பனிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.எதிர்வரும் 24 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை கூடவுள்ளது. இதன்போது சாதகமான முடிவு கிட்டும் என நம்புகின்றோம். இதற்கிடையில் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டங்களையும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும். தொழிலாளர்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அரசியல் நோக்கில் விதண்டாவாத விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமது இயலாமையை மூடிமறைத்துக்கொள்வதற்காக காங்கிரஸ்மீது வசைபாடி வருகின்றனர். தொழிலாளர்களின் நலன்கருதியே காங்கிரஸ் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு தொழிற்சங்க சமரை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றது. எனவே, உதவி வழங்காவிட்டாலும்,காலை வாராமல் இருக்கும் வகையில் செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில் அரசியல் செய்யலாம். சம்பள விடயத்தில் அரசியலை திணிக்க வேண்டாம் எனவும்  அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement