• May 21 2024

இலங்கை தொடர்பில் கடன் வழங்கும் நாடுகள் நம்பிக்கை: அமைச்சர் தகவல் SamugamMedia

Chithra / Mar 27th 2023, 8:29 am
image

Advertisement

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கான கடனை வழங்குவது ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியுடன் வெளிநாட்டு கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு பின்னர் இலங்கைக்கு முதலாம் கட்ட நிதி கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன்பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கைக்கு விரைவில் வழங்கவுள்ளன.

இது இலங்கை மீது ஏனைய நாடுகளுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் கடன் வழங்கும் நாடுகள் நம்பிக்கை: அமைச்சர் தகவல் SamugamMedia உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கான கடனை வழங்குவது ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியுடன் வெளிநாட்டு கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு பின்னர் இலங்கைக்கு முதலாம் கட்ட நிதி கிடைக்கப்பெற்றிருந்தது.இதன்பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கைக்கு விரைவில் வழங்கவுள்ளன.இது இலங்கை மீது ஏனைய நாடுகளுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement