• May 19 2024

இனவாதமும் மதவாதமும் பேசி தமிழ் எம்.பிக்களைச் சீண்டாதீர் - சந்திரிகா வலியுறுத்து samugammedia

Chithra / Aug 29th 2023, 5:19 pm
image

Advertisement

"இனவாதம் பேசி - மதவாதம் பேசி வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சீண்டிப் பார்ப்பதை தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

"13" மைனஸ், "13" பிளஸ் எனக் கூறுபவர்களில் ஒரு தரப்பினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில் நாட்டில் இனவெறியை, மதவெறியைத் தூண்டும் கருத்துக்கள் நாளுக்கு நாள் வந்துகொண்டிருக்கின்றன. இது முழு நாட்டுக்கும் பேரவமானத்தை ஏற்படுத்தும்.

வடக்கு - கிழக்கு மக்களோ அல்லது தெற்கில் உள்ள மக்களோ மீண்டுமொரு வன்முறையை - யுத்தத்தை  விரும்பவில்லை. அரசியல்வாதிகள்தான் தங்கள் சுயலாபத்துக்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் கக்கி வருகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசு இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்." - என்றார்.

இனவாதமும் மதவாதமும் பேசி தமிழ் எம்.பிக்களைச் சீண்டாதீர் - சந்திரிகா வலியுறுத்து samugammedia "இனவாதம் பேசி - மதவாதம் பேசி வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சீண்டிப் பார்ப்பதை தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க."13" மைனஸ், "13" பிளஸ் எனக் கூறுபவர்களில் ஒரு தரப்பினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-"ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில் நாட்டில் இனவெறியை, மதவெறியைத் தூண்டும் கருத்துக்கள் நாளுக்கு நாள் வந்துகொண்டிருக்கின்றன. இது முழு நாட்டுக்கும் பேரவமானத்தை ஏற்படுத்தும்.வடக்கு - கிழக்கு மக்களோ அல்லது தெற்கில் உள்ள மக்களோ மீண்டுமொரு வன்முறையை - யுத்தத்தை  விரும்பவில்லை. அரசியல்வாதிகள்தான் தங்கள் சுயலாபத்துக்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் கக்கி வருகின்றனர்.இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசு இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement