காங்கேசன்துறை பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியவற்றிற்கு இடையிலான சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்கும் தன்னுடைய முயற்சி விரைவில் சாத்தியமாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாண சர்வதேச விமான சேவைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் பயணத்திற்கு சுமார் 22 மணி நேரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள கடல் ஆழமாக இல்லாததால் பாண்டிச்சேரி காரைக்கால் துறைமுகம் சிறந்த தேர்வாக இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியவற்றுக்கு இடையிலான சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க பட்டால் மண்ணெண்ணெய் டீசல் போன்ற எரிபொருள் , பாம் எண்ணெய் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் நேரடியாக வடக்கு கொண்டுவர முடியும்.
இதனால் போக்குவரத்து செலவுகள் குறைந்து பொருட்களின் விலைகளும் குறையும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.