கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பளை பிரதேச வைத்திய சாலையில் கடமையிலிருந்த போது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தனது கடமைகளை அவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.