கிரிபத்கொடை தளுகம பிரதேசத்தில் பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்குள் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரான பெண் கட்டிடத்திற்கு அருகில் நடமாடி திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 25 வயதான இந்த பெண் களனி பியமக வீதி, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்பவர் எனவும் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட பெண் மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாளைய (10) தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.