கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் (05) நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது ஆளுநர் குறைதீர்க்கும் மையத்தில் மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற்று தருவதற்காக தொழில்நுட்ப அதிகாரிகள் இணைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இதில் மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.