சிவபூமி அறக்கட்டளையினரால் யாழ் நாவற்குழிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி அரும் பொருட் காட்சியகத்தில் வல்லை பட்ட போட்டியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை பெற்று கொண்ட யாழ் இளைஞனான ம.பிரசாந்தின் புகைப்படம் மற்றும் அவரது பட்டங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
வல்லை பட்டப் போட்டியில் ஏராளமான பட்டங்கள் ஏற்றப்படினும் இவரது தொழினுட்ப அறிவுசார்ந்து வடிவமைக்கபட்ட பட்டங்கள் கடந்த 5 வருடங்களாக முதலிடத்தை பெற்று வருகின்றமை தொடர்பில் யாழ் மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை சிவபூமி அரும் பொருட் காட்சியகத்தில் குறித்த இளைஞனது புகைப்படம் மற்றும் பட்டங்களின் படங்கள் கடந்த வருடம் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதனால் அரும் பொருட் காட்சியகத்தை பார்வையிட வருபவர்களும் அதனை பார்வையிட்டு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.