கல்வி பொதுதராதர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உத்தியோகபூர்வ விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆகஸ்ட் 16ஆம் திகதி பாடசாலை விடுமுறையுடன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்குவதால், ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிவதால் ஏற்படும் அழுத்தத்தைத் தவிர்க்க ஓய்வு அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
அந்த கோரிக்கையை ஏற்று கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும் கடந்த 18ஆம் திகதி தொடங்கிய விடைத்தாள்கள் மதிப்பீடு 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.