• May 04 2024

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் நீடிப்பு - அமைச்சரவை வழங்கிய அனுமதி!samugammedia

raguthees / Mar 29th 2023, 2:33 pm
image

Advertisement

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

இந்த நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 60 வயது நிறைவடைவதை தொடர்ந்து அவர் கடந்த மார்ச்  26 ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவிருந்தார்.

இவ்வாறான சூழலில் அவரது சேவையை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கவே அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதற்கிணங்க அவர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபர் பதவியை வகிப்பார் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் நீடிப்பு - அமைச்சரவை வழங்கிய அனுமதிsamugammedia பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,இந்த நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 60 வயது நிறைவடைவதை தொடர்ந்து அவர் கடந்த மார்ச்  26 ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவிருந்தார்.இவ்வாறான சூழலில் அவரது சேவையை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கவே அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.இதற்கிணங்க அவர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபர் பதவியை வகிப்பார் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement