• Oct 01 2024

சேற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் வெளிவந்த உண்மைகள்! SamugamMedia

Tamil nila / Mar 12th 2023, 6:30 pm
image

Advertisement

தனது வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் சேற்றுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் அயலவர்கள் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.


அத்தோடு திருமணமாகி பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவருடன் வீட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 10ஆம் திகதி இரவு கிராமத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு கணவர் சென்றிருந்ததுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த பின் மனைவியைக் காணவில்லை என்று அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


அதன் பின்னர் அனைவரும் இந்த இளம் பெண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிய நிலையில் அவரது சடலம் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.


சம்பவம் நடந்த அன்று இரவு 9.30 மணியளவில் அலறல் சத்தம் ஒன்று கேட்டதாகவும் கதவைத் திறந்து பார்த்தபோது சத்தம் கேட்கவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.


அலவத்துகொட விலான பல்லேகம எல்லேகடே பிரதேசத்தில் வசித்து வந்த தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


சடலம் இருந்த இடத்திலிருந்து மோப்ப நாய்ப் பிரிவின் நாய் ஒன்று விடுவிக்கப்பட்டதையடுத்து அந்த நாய் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் சுற்றி வீடொன்றுக்கு சென்றுள்ளதுடன் அவ் வீட்டில் வசிக்கும் திருமணமான ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சேற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் வெளிவந்த உண்மைகள் SamugamMedia தனது வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் சேற்றுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் அயலவர்கள் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.அத்தோடு திருமணமாகி பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவருடன் வீட்டில் வசித்து வருகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 10ஆம் திகதி இரவு கிராமத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு கணவர் சென்றிருந்ததுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த பின் மனைவியைக் காணவில்லை என்று அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் அனைவரும் இந்த இளம் பெண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிய நிலையில் அவரது சடலம் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் நடந்த அன்று இரவு 9.30 மணியளவில் அலறல் சத்தம் ஒன்று கேட்டதாகவும் கதவைத் திறந்து பார்த்தபோது சத்தம் கேட்கவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.அலவத்துகொட விலான பல்லேகம எல்லேகடே பிரதேசத்தில் வசித்து வந்த தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.சடலம் இருந்த இடத்திலிருந்து மோப்ப நாய்ப் பிரிவின் நாய் ஒன்று விடுவிக்கப்பட்டதையடுத்து அந்த நாய் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் சுற்றி வீடொன்றுக்கு சென்றுள்ளதுடன் அவ் வீட்டில் வசிக்கும் திருமணமான ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement