• May 02 2024

தந்தை செல்வாவின் 125வது ஜனன தினம் யாழில் அனுஸ்டிப்பு!samugammedia

Sharmi / Mar 31st 2023, 12:22 pm
image

Advertisement

தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு  யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று(31)  காலை இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம்,மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன்,வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வு


தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தினார்.

இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் ஜெபநேசன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நினைவு தூபிக்கு மலர் துவி அஞ்சலி செலுத்தினர்.





தந்தை செல்வாவின் 125வது ஜனன தினம் யாழில் அனுஸ்டிப்புsamugammedia தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு  யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று(31)  காலை இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம்,மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன்,வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வுதந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நிகழ்வு நடைபெற்றது.இதன் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தினார்.இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் ஜெபநேசன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நினைவு தூபிக்கு மலர் துவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement