FIFA உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுவதால் மனமுடைந்து கண்கலங்கிய ஈரானிய வீரரை அமெரிக்க வீரர் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கத்தாரில் நேற்றைய தினம் நடைபெற்ற உலகக்கோப்பை ஆட்டத்தில் ஈரான் அணியை அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதனால் ஈரானின் FIFA உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது.
ஆனால், ஆட்டத்தின் முடிவில் அமெரிக்க வீரர் செய்த செயல் இரசிகர்களின் இதயங்களை வென்றது.
உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவதை தாங்கிக்கொள்ள முடியாத ஈரானிய வீரர் ரமின் ரெசையன் மனமுடைந்து கண்கலங்கியமை இரசிகர்களை கண் கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.