• Jul 19 2025

இஸ்ரேலில் -இலங்கை இளைஞர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து!

Thansita / Jul 19th 2025, 11:09 am
image

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. 

Kiryat Malakhi பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

பேருந்தில் இருந்த 20 இலங்கையர்களும் கதவுகள் திறக்கப்படாததால் ஜன்னல்களை உடைத்து தப்பியுள்ளனர்.

 இதில் ஒருவர் மட்டும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரின் நிலைமை மேன்மைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம்  குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

சம்பந்தப்பட்ட நிறுவனமும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தூதுவர் தெரிவித்தார்.

இஸ்ரேலில் -இலங்கை இளைஞர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. Kiryat Malakhi பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.பேருந்தில் இருந்த 20 இலங்கையர்களும் கதவுகள் திறக்கப்படாததால் ஜன்னல்களை உடைத்து தப்பியுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை மேன்மைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தீ விபத்திற்கான காரணம்  குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனமும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தூதுவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement