• May 10 2024

இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கை: 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிப்பு!SamugamMedia

Sharmi / Mar 17th 2023, 3:42 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  12 பேரும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  12 மீனவர்களும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை  நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  12 மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பன்னிரண்டு மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் இந்திய துணை தூதரகம் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கை: 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிப்புSamugamMedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  12 பேரும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குறித்த  12 மீனவர்களும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை  நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.இந்நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  12 மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பன்னிரண்டு மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் இந்திய துணை தூதரகம் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement