இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் மூன்று படகுகளுடன் கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் 15ம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் இன்று(27) மீண்டும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்களுக்கான விளக்கமறியலை கார்த்திகை மாதம் 08ம் திகதி வரை நீடித்து ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.