உணவு விஷமான காரணத்தினால் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பண்டாரவளை, துல்கொல்ல பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.