• Sep 17 2024

முதல் தடவையாக பொலிஸ்மா அதிபர் இல்லாமல் இயங்கும் பொலிஸ் திணைக்களம்..!samugammedia

Sharmi / Jul 7th 2023, 11:41 am
image

Advertisement

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 11 நாட்கள் ஆகின்றன. இன்னும் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இப்படி பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாமல் பொலிஸ் திணைக்களம் இயங்குகின்றது.

கடந்த 26ஆம் திகதி சந்தன விக்கிரமரத்ன ஓய்வுபெற்றுவிட்டார். அவரது பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பிரியாவிடை நிகழ்வுகூட அவருக்கு நடத்தப்படவில்லை.

அடுத்த பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு இன்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் பொலிஸ்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியபோதும் எதுவித முன்னேற்றமும் இல்லை.

பொலிஸ்மா அதிபருக்குத் தகுதியான எவரும் சிபாரிசு செய்யப்படாமையே இதற்குக் காரணம் என்று அறியமுடிகின்றது.

முதல் தடவையாக பொலிஸ்மா அதிபர் இல்லாமல் இயங்கும் பொலிஸ் திணைக்களம்.samugammedia பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 11 நாட்கள் ஆகின்றன. இன்னும் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை.இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இப்படி பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாமல் பொலிஸ் திணைக்களம் இயங்குகின்றது.கடந்த 26ஆம் திகதி சந்தன விக்கிரமரத்ன ஓய்வுபெற்றுவிட்டார். அவரது பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பிரியாவிடை நிகழ்வுகூட அவருக்கு நடத்தப்படவில்லை.அடுத்த பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு இன்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இது தொடர்பில் பொலிஸ்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியபோதும் எதுவித முன்னேற்றமும் இல்லை.பொலிஸ்மா அதிபருக்குத் தகுதியான எவரும் சிபாரிசு செய்யப்படாமையே இதற்குக் காரணம் என்று அறியமுடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement