அரகலயவுக்கு ஆதரவளித்த வெளிநாட்டு குழு யார் என்பது குறித்தும் விரைவில் மேலதிக விவரங்கள் வெளிவரும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாங்கள் மட்டுமல்ல, அரகலயவோடு இருந்த ஜனதா மக்கள் விடுதலை முன்னணியும் அரகலயாவில் வெளிநாட்டு குழுவொன்றுக்கு பங்கு இருப்பதாக இப்போது கூறுகின்றது .
எங்களுடன் இருந்த சக பாராளுமன்ற உறுப்பினர் கூட இந்த விவரங்களை அம்பலப்படுத்தி புத்தகம் எழுதியுள்ளார்.
ஜே.வி.பி அரகலயவின் ஒரு பகுதியாகும், எனவே அவர்களே இப்போது அரகலயவின் பின்னணியில் சில வெளிநாட்டு குழுக்கள் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளனர் அவர் மேலும் கூறியுள்ளார்.
தற்போது அரகலயாவினால் நியமிக்கப்பட்ட அரசாங்கமே இருக்கின்றது. அரகலயாவினால் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார், அதன் காரணமாகவே இந்த அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளது என நாமல் தெரிவித்துள்ளார் .
அரகலயவின் பின்னணியில் வெளிநாட்டு குழு. விரைவில் அம்பலமாகும் என்கிறார் நாமல். samugammedia அரகலயவுக்கு ஆதரவளித்த வெளிநாட்டு குழு யார் என்பது குறித்தும் விரைவில் மேலதிக விவரங்கள் வெளிவரும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாங்கள் மட்டுமல்ல, அரகலயவோடு இருந்த ஜனதா மக்கள் விடுதலை முன்னணியும் அரகலயாவில் வெளிநாட்டு குழுவொன்றுக்கு பங்கு இருப்பதாக இப்போது கூறுகின்றது .எங்களுடன் இருந்த சக பாராளுமன்ற உறுப்பினர் கூட இந்த விவரங்களை அம்பலப்படுத்தி புத்தகம் எழுதியுள்ளார்.ஜே.வி.பி அரகலயவின் ஒரு பகுதியாகும், எனவே அவர்களே இப்போது அரகலயவின் பின்னணியில் சில வெளிநாட்டு குழுக்கள் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளனர் அவர் மேலும் கூறியுள்ளார்.தற்போது அரகலயாவினால் நியமிக்கப்பட்ட அரசாங்கமே இருக்கின்றது. அரகலயாவினால் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார், அதன் காரணமாகவே இந்த அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளது என நாமல் தெரிவித்துள்ளார் .