• Sep 17 2024

ஜெல் வடிவில் உருக்கப்பட்ட 11 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற கும்பல் - கட்டுநாயக்கவில் சிக்கினர்! samugammedia

Chithra / Apr 3rd 2023, 1:05 pm
image

Advertisement

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விமான நிலைய பாதுகாப்பு  பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து 11 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற வரியில்லா வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரும் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நகைகள் ஜெல் வடிவில் ஆக்கப்பட்டு பார்சல்களில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த பயணி ஒருவர் இந்த தங்க கையிருப்பை, பயணிகள் பரிமாற்று பகுதியில் உள்ள  குறித்த வரியில்லாத வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரிடம்  கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த முகாமையாளர் அதனை நாட்டுக்குள்  கடத்திச் செல்ல  முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகளால் கைது  செய்யப்பட்ட மற்றைய இரு சந்தேக நபர்களும் இந்திய பிரஜைகள் என்பதுடன் அவர்கள் கொண்டு வந்த 7 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

தங்கம் துபாய் அல்லது சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த தங்கம் கையிருப்பு  ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளது.

ஜெல் வடிவில் உருக்கப்பட்ட 11 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற கும்பல் - கட்டுநாயக்கவில் சிக்கினர் samugammedia கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விமான நிலைய பாதுகாப்பு  பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.விமான நிலையத்திலிருந்து 11 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற வரியில்லா வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரும் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நகைகள் ஜெல் வடிவில் ஆக்கப்பட்டு பார்சல்களில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.வெளிநாடு ஒன்றிலிருந்து வந்த பயணி ஒருவர் இந்த தங்க கையிருப்பை, பயணிகள் பரிமாற்று பகுதியில் உள்ள  குறித்த வரியில்லாத வர்த்தக நிலையம் ஒன்றின் முகாமையாளரிடம்  கொடுத்துள்ளார்.பின்னர் அந்த முகாமையாளர் அதனை நாட்டுக்குள்  கடத்திச் செல்ல  முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்க அதிகாரிகளால் கைது  செய்யப்பட்ட மற்றைய இரு சந்தேக நபர்களும் இந்திய பிரஜைகள் என்பதுடன் அவர்கள் கொண்டு வந்த 7 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.தங்கம் துபாய் அல்லது சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த தங்கம் கையிருப்பு  ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement