காணமல் போயிருந்த 15 வயதுடைய மாணவி புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று மாலை புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் என்ற மாணவி கடந்த 18 ஆம் திகதியிலிருந்த காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மாணவி தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவி காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த மாணவி நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தந்தை மேலும் தெரிவித்தார்
மன்னாரில் காணாமல்போன சிறுமி புத்தளத்தில் மீட்பு – பொலிசாரிடம் ஒப்படைப்பு samugammedia காணமல் போயிருந்த 15 வயதுடைய மாணவி புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று மாலை புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் என்ற மாணவி கடந்த 18 ஆம் திகதியிலிருந்த காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.மாணவி தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.மாணவி காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இந்நிலையில், குறித்த மாணவி நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தந்தை மேலும் தெரிவித்தார்