கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதை ஒத்திவைக்குமாறு மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றோர் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
'கோடை வெயிலை கருத்தில் கொண்டு தரம்1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும். பாடசாலை கோடை வெயிலின் தாக்கத்தால் காலதாமதமாகத் திறக்கப்படுவதால், பாடசாலை வேலை நாட்களில் எண்ணிக்கையை சரி செய்ய மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் பாடசாலை செயற்படுத்தப்பட்டு அந்த விடுமுறை நாட்கள் சரி செய்யப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியிலும் பாடசாலை மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
'வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் ஜுன் 7 ஆம் தேதி பாடசாலைகள் திறக்கப்படும். கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறது' எனவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. பாடசாலை விடுமுறை நீடிப்பு.வெளியான அறிவிப்பு. samugammedia கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதை ஒத்திவைக்குமாறு மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றோர் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'கோடை வெயிலை கருத்தில் கொண்டு தரம்1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும். பாடசாலை கோடை வெயிலின் தாக்கத்தால் காலதாமதமாகத் திறக்கப்படுவதால், பாடசாலை வேலை நாட்களில் எண்ணிக்கையை சரி செய்ய மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் பாடசாலை செயற்படுத்தப்பட்டு அந்த விடுமுறை நாட்கள் சரி செய்யப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் புதுச்சேரியிலும் பாடசாலை மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர், 'வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் ஜுன் 7 ஆம் தேதி பாடசாலைகள் திறக்கப்படும். கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறது' எனவும் அவர் தெரிவித்தார்.