சிங்கள மக்களின் கிளர்ச்சியால் அதிபர் பதவியை துறந்த கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் நுழைவதற்கு நாமல் ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இதன்படி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது அவரது விருப்பத்திற்கேற்ப அமையும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை தாம் தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயகம் என்பது பல்வேறு நபர்கள் அரசியலுக்கு வருவதும், அதன் மூலம் பல்வேறு கருத்துக்கள் அரசியல் நீரோட்டத்தில் சேர்வதுமே என்றும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.