புத்தளம் மாவட்டத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று புத்தளம் கருத்தரவை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது.
புத்தாடைகளை உடுத்தி நறுமணம் பூசி மக்கள் தொழுகைகளுக்காக வருகை தந்திருந்தனர்.
குறித்த பெருநாள் தொழுகை இமாம் மின்ஹாஜ் அவர்களினால் தொழுவிக்கப்பட்டது.
குறித்த பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மகிழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது பொலிஸாரினால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டமையும் காணக்கூடியதாக இருந்தது.