1,400 மருத்துவ பட்டதாரிகளில் இவ்வருடம் ஏப்ரலில் மருத்துவ பயிற்சிகளை நிறைவு செய்த 300 பட்டதாரிகள், வைத்திய நியமனங்களைப் பெற மறுப்பதால் நாட்டின் சுகாதாரத்துறை இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சபையின் பதிவை மருத்துவ பயிற்சியை நிறைவு செய்த பின்னரே பெற முடியுமென கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.