குரோதி சித்திரை புதுவருடம் மலர்ந்துள்ளது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நேற்றிரவு 8.15 அளவில் குரோதி புது வருடம் பிறந்துள்ளது.
அத்துடன் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நேற்றிரவு 9.04 அளவில் குரோதி வருடம் மலர்ந்துள்ளது.
மலர்ந்துள்ள குரோதி புதுவருடத்தை பட்டாசு கொளுத்தி நாட்டின் பல பாகங்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.