எலும்பு முறிவு நோய்களுக்குட்பட்ட சிகிச்சைகளை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்வதில் பிரச்சினை காணப்படுவதாகவும் குறித்த சிகிச்சைகளை தனியார் வைத்தியசாலைகளில் மிக வேகமாக பெற முடிகின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த இரு வருடங்களாக இச் சிகிச்சை முறைகளுக்குரிய உபகரணங்கள், மருந்துகள் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சால் வழங்கப்படவில்லை.
இச் சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியலை பாராளுமன்ற உறுப்பினரிடம் ஒப்படைத்து புலம்பெயர்ந்தோர் மற்றும் சமூக நலனுள்ளோரின் உதவிகள் மூலம் நோயாளர்களின் சகிச்சைக்கு தேவையான நிதியுதியைப் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் யாழ். மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
நோயாளர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய இணையத்தளமொன்றை உருவாக்குவதன் மூலம் நோயாளர்களின் சிகிச்சைக்குரிய உதவிகளை மிக வேகமாக பெற்றுக்கொள்ளலாம் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் டக்லஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
யாழ். போதனாவில் எலும்பு முறிவுக்குட்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்வதில் சிக்கல். samugammedia எலும்பு முறிவு நோய்களுக்குட்பட்ட சிகிச்சைகளை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்வதில் பிரச்சினை காணப்படுவதாகவும் குறித்த சிகிச்சைகளை தனியார் வைத்தியசாலைகளில் மிக வேகமாக பெற முடிகின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.கடந்த இரு வருடங்களாக இச் சிகிச்சை முறைகளுக்குரிய உபகரணங்கள், மருந்துகள் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சால் வழங்கப்படவில்லை. இச் சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியலை பாராளுமன்ற உறுப்பினரிடம் ஒப்படைத்து புலம்பெயர்ந்தோர் மற்றும் சமூக நலனுள்ளோரின் உதவிகள் மூலம் நோயாளர்களின் சகிச்சைக்கு தேவையான நிதியுதியைப் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் யாழ். மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.நோயாளர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய இணையத்தளமொன்றை உருவாக்குவதன் மூலம் நோயாளர்களின் சிகிச்சைக்குரிய உதவிகளை மிக வேகமாக பெற்றுக்கொள்ளலாம் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் டக்லஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.