• Sep 17 2024

இன்று முதல் மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் சுகாதார தொழிற்சங்கங்கள்..! அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Apr 1st 2024, 9:13 am
image

Advertisement

 

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (01) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இன்று தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை (02) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சானக தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தோம், ஆனால் இன்று ஜனாதிபதி அலுவலகம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனாலேயே 5 வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம். 

அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்  எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முதல் மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் சுகாதார தொழிற்சங்கங்கள். அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (01) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.இன்று தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை (02) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சானக தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தோம், ஆனால் இன்று ஜனாதிபதி அலுவலகம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதனாலேயே 5 வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம். அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்  எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement