• Oct 04 2024

திருமலையில் கடும் மழை..! 16 வீடுகள் சேதம்..! அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு..!samugammedia

Sharmi / May 30th 2023, 12:24 pm
image

Advertisement

திருகோணமலையில் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் (29) மாலை பலத்த காற்று வீசியதில் சேறுவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலப்பொல பகுதியில் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதே வேளை மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குளம் தெற்கு பகுதியில் 08 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.

இதில் ஒன்பது குடும்பங்களை சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைவேளை கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.




திருமலையில் கடும் மழை. 16 வீடுகள் சேதம். அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு.samugammedia திருகோணமலையில் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் (29) மாலை பலத்த காற்று வீசியதில் சேறுவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலப்பொல பகுதியில் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இதே வேளை மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குளம் தெற்கு பகுதியில் 08 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.இதில் ஒன்பது குடும்பங்களை சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இடைவேளை கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement