தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் நாள் வார நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் கிளிநொச்சியில் இன்றையதினம் மாவீரர்களின் பெற்றோருக்கான கௌரவிப்பு இடம்பெற்றது.
குறிப்பாக கிளிநொச்சி பாரதிபுரம், பொன்னகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர்களின் பெற்றோர் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்ட்டனர்.
முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலிக்கப்பட்டதுடன், பொது உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்ட்டது.
தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.