ஹொரண குருகொட சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில், மேவனபலனயிலிருந்து குருகொட நோக்கி வந்த கார் ஒன்று வளைவில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்து நேற்று (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளும், காரும் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி மக்கள் தலையிட்டு தீயை அணைத்தனர்.
விபத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த நபர் சுமார் பதினைந்து மீற்றர் தூரம் தூக்கி எறியப்பட்டு எதிர்திசையில் உள்ள கடை ஒன்றின் கூரையின் மீது வீழ்ந்த நிலையில் அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.