திருக்கோவில் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர்.
இன்று (21) செவ்வாய்கிழமை அவர்களது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துளள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோககரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.
குறித்த இருவருக்கும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகியதுடன் இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த கணவன், மனைவி. தவிக்கும் இரண்டு வயது பெண் குழந்தை. இலங்கையில் சோகம். திருக்கோவில் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர்.இன்று (21) செவ்வாய்கிழமை அவர்களது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துளள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோககரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.குறித்த இருவருக்கும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகியதுடன் இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.