அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க பதிலளித்துள்ளார்.
ஜனக்க ரத்னாயக்கவை குறித்த ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
இதற்கு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்தநிலையிலேயே குறித்த குற்றப்பத்திரிகை தொடர்பில் ஜனக்க ரத்னாயக்க தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
குற்றப்பத்திரத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - காஞ்சனவுக்கு ஜனக்க பதில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க பதிலளித்துள்ளார்.ஜனக்க ரத்னாயக்கவை குறித்த ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.இதற்கு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.இந்தநிலையிலேயே குறித்த குற்றப்பத்திரிகை தொடர்பில் ஜனக்க ரத்னாயக்க தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.